Saturday, April 4, 2009
விஜய்க்கு இரண்டு ஜோடி
பாபு சிவன் இயக்கத்தில் வேட்டைக்காரனில் நடித்து வருகிறார் விஜய். முந்தைய இரு படங்கள் சரியாகப் போகாததால் தொடக்க நாள் போஸ்டர்கூட அடிக்காமல் படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் இளைய தளபதி.
முதல்கட்டமாக ராஜமுந்திரியில் விஜய்யின் ஓபனிங் பாடல் படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் அவரது மகன் சஞ்சய்யும் ஒரு வரிக்கு ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது. அருந்ததீ புகழ் அனுஷ்கா விஜய்யின் ஜோடி. இவர் தவிர இன்னொரு ஜோடியும் விஜய்க்கு இருக்கிறாராம்.
இரண்டாவது ஹீரோயினான அந்த வேடத்தில் நடிக்கப் போகிறவர் யார்? இரண்டாம் வரிசை நாயகிகள் அந்த வேடத்துக்காக தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், பிரகாசமான வாய்ப்பு மாடல்ஷாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
கே.டி. குஞ்சுமோனின் காதலுக்கு மரணமில்லை படத்தில் மீராநந்தனுடன் இன்னொரு ஹீரோயினாக அறிமுகமானவர்தான் இந்த மாடல்ஷா. முதல் படம் வெளிவரும் முன்பே விஜய் வரைக்கும் இவரது புகழ் எட்டியிருக்கிறது. வேட்டைக்காரனில் இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு இவருக்கே என்கிறார்கள்.
மாடல்ஷாவின் அதிர்ஷ்டம் எப்படி என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்
Saturday, March 28, 2009
நதியாவின் ஆக்ஷன் ஆசை
காஷ்மீர்ல குளிர் போகுமா? எவரஸ்டின் உயரம் குறையுமா? அதுமாதிரிதான் நதியாவின் இளமையும் அப்படியே இருக்கிறது.
சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவரை மீண்டும் தரிசனம் தரவைத்த இயக்குனர் எம்.ராஜாவுக்கு நன்றி. நல்ல கதைகளுக்கு மட்டுமே கால்ஷீட். இதுதான் நதியாவின் பாலிசி. அந்த வகையில் அவர் தற்போது நடித்து வெளிவந்துள்ள படம் ‘பட்டாளம்'. அப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டபோது...
”இது செம ஜாலியான படம். பள்ளி தாளாளராக நடித்துள்ளேன். இந்த கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் முக்கியமான கதை. சின்ன பசங்களுடன் சேர்ந்து நடித்த அனுபவம் புதுசா இருந்தது. ஆரம்பத்தில் நான் சீனியர் நடிகை என பயந்து யாரும் என்னிடம் பேசவில்லை. சில நாட்களில் ரொம்ப நெருக்கமாகிவிட்டோம். பத்ரிகையாளர்கள் போலவே அவர்களும் நான் அழகாக இருப்பதாக கூறி என் இளமையின் ரகசியம் என்ன என்று கேட்டார்கள்.
‘என்னை சுற்றியிருக்கும் நல்லவர்களும், தினமும் செய்துவரும் யோகாவும்தான் அதற்கு காரணம்' என கூறினேன். யோகா உடம்பை மட்டுமின்றி சிந்தனையையும் வளப்படுத்துகிறது.” யோகா ஆசிரியர் போல பேச ஆரம்பித்த நதியாவிடம் அவர் நடிக்கவிரும்பும் கதாபாத்திரம் பற்றி கேட்டோம்.
“நல்ல நல்ல கேரக்டர்கள் பண்ணிவிட்டேன். ஆனால் ரொம்ப நாளாகவே ஒரு நிறைவேறாத ஆசை மனசுக்குள் இருக்கிறது. முழுநீள ஆக்ஷன் படத்தில் நடிக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. அப்படியான கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.”
ஆக்ஷன் படமெடுப்பதில் எக்ஸ்பெட்டாக இருக்கும் இயக்குனர்கள் கவனிக்க!
Friday, March 20, 2009
வேட்டைக்காரனில் விஜய் மகன்
வேட்டைக்காரன் பாடல் காட்சியில் விஜய் தனது மகன் சஞ்சயை ஆட வைக்கிறார். நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கசிந்திருக்கும் இந்த தகவல் விஜயை அறிந்தவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தனது மகன், மகள் இருவரின் புகைப்படமும் பத்திரிகைகளில் வெளிவருவதை விரும்பாதவர் விஜய். ஒருமுறை விஜய் ரசிகர் மன்ற பத்திரிகையில் அவரது மகன் சஞ்சய் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படம் வெளியானது. அவ்வளவுதான். கொந்தளித்துவிட்டார் விஜய். அவரது ரசிகர் மன்ற தலைவர் குறிப்பிட்ட பத்திரிகை அலுவலகத்துக்கு சென்று அந்த புகைப்படங்களை வாங்கிய பிறகே விஜயின் பிபி குறைந்தது. தனது குழந்தைகளின் புகைப்படமே பத்திரிகையில் வெளிவரக் கூடாது என்பதில் கறாராக இருந்தவர், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்த நேரம் தனது மகனை தோளில் சுமந்தபடி மைதானத்துக்கு வந்தது பலரின் புருவங்களை உயரச் செய்தது. இதோ அடுத்த அதிரடியாக தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறார். விஜய் ரசிகர்கள் போஸ்டரில் படம் போட இன்னொரு ஹீரோ கிடைத்திருக்கிறார். பட்டாசு வெடிக்க வேண்டியதுதான் பாக்கி.
தனது மகன், மகள் இருவரின் புகைப்படமும் பத்திரிகைகளில் வெளிவருவதை விரும்பாதவர் விஜய். ஒருமுறை விஜய் ரசிகர் மன்ற பத்திரிகையில் அவரது மகன் சஞ்சய் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படம் வெளியானது. அவ்வளவுதான். கொந்தளித்துவிட்டார் விஜய். அவரது ரசிகர் மன்ற தலைவர் குறிப்பிட்ட பத்திரிகை அலுவலகத்துக்கு சென்று அந்த புகைப்படங்களை வாங்கிய பிறகே விஜயின் பிபி குறைந்தது. தனது குழந்தைகளின் புகைப்படமே பத்திரிகையில் வெளிவரக் கூடாது என்பதில் கறாராக இருந்தவர், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்த நேரம் தனது மகனை தோளில் சுமந்தபடி மைதானத்துக்கு வந்தது பலரின் புருவங்களை உயரச் செய்தது. இதோ அடுத்த அதிரடியாக தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறார். விஜய் ரசிகர்கள் போஸ்டரில் படம் போட இன்னொரு ஹீரோ கிடைத்திருக்கிறார். பட்டாசு வெடிக்க வேண்டியதுதான் பாக்கி.
Friday, March 13, 2009
ரஜினி, விஜய் ஏற்படுத்திய பஞ்சம்
ரஜினியின் எந்திரன், விஜயின் வேட்டைக்காரன் இரண்டும் சேர்ந்து டான்சர்கள் பஞ்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரஜினியின் எந்திரன் படத்தின் பாடல் காட்சி படமாகி வருகிறது. சாபுசிரில் அமைத்திருக்கும் பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். படத்தில் ரஜினியின் ஓபனிங் பாடலாக இது இருக்கும் என்கின்றன தகவல்கள். இந்தப் பாடல் காட்சியில் ரஜினி, ஐஸ்வர்யா ராயுடன் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களும் பங்கு பெறுகிறார்கள். அனைவரும் தற்போது ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். அதே ஆந்திராவில் படப்பிடிப்புக்கு பெயர்போன ராஜமுந்திரியில் விஜயின் வேட்டைக்காரன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் ஆண்டினியின் இசையில் தயாரான பாடலை இங்கு படமாக்கி வருகிறார் வேட்டைக்காரன் இயக்குனர் பி.பாபு சிவன். ஷோபி நடனம் அமைக்கும் இந்தப் பாடலில் நூறு நடனக் கலைஞர்கள் விஜயுடன் ஆடுகிறார்கள். நூறு பேரும் முகாமிட்டிருப்பது ராஜமுந்திரியில். இருக்கிற சில நூறு நடனக் கலைஞர்களை எந்திரனுக்கும், வேட்டைக்காரனுக்கும் அள்ளிக் கொண்டு போயிருப்பதால் மற்ற படங்களுக்கு டான்சர்கள் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.
வேட்டைக்காரன் விஜயும், மீசையும்! மாறு வேடமா? மயக்கும் கெட் அப்பா?
மூக்குக்கு கீழே இரண்டு கோடுகள் போல இருக்கும் மீசையை க்ளைமாக்சில் எம்ஜிஆர் பிய்த்து எடுப்பார்.
'ஆ... இன்ஸ்பெக்டர் ராமு!' என்று அதிர்வார் வில்லன். (அதுவரைக்கும் இவர்தான் எம்ஜிஆர் என்று அவருக்கு தெரியாதாம்) கால காலமாக பார்த்த காட்சிதான் என்றாலும், இந்த மாறுவேச மயக்கத்தை விடுவதாக இல்லை ஒரு ஹீரோவும். இப்போது வேட்டைக்காரன் படத்தில் விஜய் போடவிருக்கும் ஒரு கெட்டப் கொஞ்சம் பட்டையான மீசை. இது ஒரு கேரக்டரின் தோற்றமா? அல்லது மாறுவேஷமா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். இருக்கட்டும், படத்திற்கு ஹீரோயின் தேடி பெரும் வேட்டை துப்பாக்கியோடு திரிகிறார்கள். சிக்கப்போவது எந்த சிங்காரியோ? விஜயின் மனசில் பிரியங்கா சோப்ராவும், எஸ்.ஏ.சி மனசில் ஐஸ்வர்யாராயும் இருக்கிறார்களாம். யாருக்கு யாருன்னு முடிவாகியிருக்கோ? இதற்கிடையில் 100 நடனக் கலைஞர்களுடன் விஜய் ஆடும் ஒரு ஆட்டத்தை படம் பிடித்து முடித்துவிட்டார்கள். எலக்ஷன்ல யாருக்கு வாய்ஸ் கொடுப்பார்னு இளைய தளபதியோட ரசிகர்கள் இப்பவே குடையுறாங்களாம்! இது வேறயா....!
Friday, March 6, 2009
கோக் அம்பாசிடர் விஜய்
கொகோ கோலா குளிர்பானத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் விஜயை ஒப்பந்தம் செய்துள்ளது கோக் நிறுவனம்.
குளிர்பான நிறுவனங்கள் தங்களது பிராண்ட் அம்பாசிடராக பிரபல நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் நியமிப்பது வழக்கம். தமிழ்நாட்டில் கோக் குளிர்பானத்தின் அம்பாசிடராக நடிகர் விஜய் 2000 - 2003 வரை நியமிக்கப்பட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தை இந்த வருடம் மீண்டும் புதுப்பித்திருக்கிறது கோக் நிறுவனம். தமிழகத்தில் பிரபல நடிகர்கள் வரிசையில் முதலிடத்தில் விஜய் இருப்பதால் கோக் நிறுவனம் மீண்டும் அவரை தேர்வு செய்துள்ளது. விஜய் இடம்பெறும் கோக் விளம்பரங்கள் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ஷூடடிங் தற்போது நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குளிர்பான நிறுவனங்கள் தங்களது பிராண்ட் அம்பாசிடராக பிரபல நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் நியமிப்பது வழக்கம். தமிழ்நாட்டில் கோக் குளிர்பானத்தின் அம்பாசிடராக நடிகர் விஜய் 2000 - 2003 வரை நியமிக்கப்பட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தை இந்த வருடம் மீண்டும் புதுப்பித்திருக்கிறது கோக் நிறுவனம். தமிழகத்தில் பிரபல நடிகர்கள் வரிசையில் முதலிடத்தில் விஜய் இருப்பதால் கோக் நிறுவனம் மீண்டும் அவரை தேர்வு செய்துள்ளது. விஜய் இடம்பெறும் கோக் விளம்பரங்கள் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ஷூடடிங் தற்போது நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)